சிறுவர்களுக்கு நற்பண்பை வளர்க்கும் கதைகள் பல உண்டு. என்றாலும், அனைத்து கதைகளிலும் சிறுவர் – சிறுமியரைக் கவரும் வகையில் எளிய நடையில் படங்களுடன் விவரிக்கிறது இந்நுால். பிள்ளையும் புதையலும், கடினமானதைச் செய், நிலையானவர் யார்? விளையும் பயிர், பெரியவனை அடிக்கும் சிறுவன், வரும் போது தர வேண்டும், இப்படியா நடந்து கொள்வது? உதவி செய்ய உயிரை இழப்பதா? உள்ளிட்ட கதைகள், சிறுவர்கள் நல்லவர்களாகவும், நற்பண்பாளர்களாகவும் சிறந்திடச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.