இலங்கை தமிழ் பகுதியில் இருந்து, கனடா சென்று சூழலை உள்வாங்கி எழுதிய, 17 சிறுகதைகளின் தொகுப்பு. புலம்பெயர்ந்தோரிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை நயமாக வடித்துள்ளார்.
அம்மாவின் லட்சியம் ஊதாரிப் பிள்ளையால் சிதைந்து போவதை, ‘புல்லுக்கு இறைத்த நீர் கதை’யிலும், பணம் தான் முக்கியமே தவிர, பெண் செய்யும் வேலை பற்றி அக்கறை இல்லை என்பதை ‘வர்ணஜாலம்’ கதையிலும் ஒரு கருத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. உத்தியும், இயல்பான நடையும் அணி சேர்க்கின்றன.
– பின்னலுாரான்