இன்சுலின் ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை விவரிக்கும் நுால். நோயாளியின் அனுபவங்களை விவரித்து, நாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் சிகிச்சை வரலாற்றில், 1921ல் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போதுதான் இன்சுலினை கண்டுபிடித்தனர். இந்தப் புத்தகத்தில், சர்க்கரை கோளாறு உள்ளவர்களின் காதல், அன்பு, சோகம், ஏமாற்றம், நிராகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மாற்றங்களால், இன்சுலின் எடுத்துக் கொள்வதில் வசதிகள் பெருகி வருகின்றன. பேன்டிங், போஸ், டாக்டர் மோகனின் தந்தை விஸ்வநாதன் என்று, இந்த துறையில் சாதித்தவர்கள் அடித்தளமிட்ட விஷயங்கள் எந்த அளவு மேம்பாடு அடைந்துள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. சர்க்கரை நோய் சிகிச்சை பற்றி நம்பிக்கை ஏற்படுத்தும் நுால்.
–
இளங்கோவன்