சிறந்த மனிதர்கள் கடைப்பிடித்த செயல்களை காப்பியடித்தால் வாழ்வில் உயரலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தகவல்களை தொகுத்துள்ள நுால். புகழ் பெற்றவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை கதை போல் தருகிறது.
காந்திஜியின் வாழ்க்கையில் துவங்குகிறது. பள்ளியில் ஆசிரியர் கூறியும் காப்பி அடிக்க மறுத்த அவரது உயர்ந்த பண்பை கதை போல் விளக்கி, அந்த செயலை பின்பற்றச் சொல்கிறது. இது போல், கடின உழைப்பால் புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த செயல்களை விளக்கியுள்ளது. அந்த செயல்களை பின்பற்றியதால் கிடைத்த உயர்வுகளை வலியுறுத்துகிறது.
மொத்தம், 20 ஆளுமைகளின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக உள்ளது. நல்ல பண்புகளை பின்பற்ற வலியுறுத்தும் நுால்.
– மதி