சமண முனிவர்கள் அருளிய நாலடியாரை அனைத்து தரப்பினரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை வகுத்து தரும் நுால். ஆங்கில மொழிபெயர்ப்பு, பிற்காலத்தில் புத்துரை வழங்கியதையும் குறிப்பிட்டுள்ளது.
திருக்குறளும், நாலடியாரும் அறக்கருத்துகளை வலியுறுத்தினாலும் அமைப்பில் சில மாற்றங்கள் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. திருக்குறள் அறத்துப்பால் இல்லறத்தை முன்னிலைப்படுத்தி துறவறத்தில் முடிக்கிறது.
நாலடியார் துறவறவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. அறம், பொருள், இன்பம் பற்றி சிறப்புற உரைத்து இலக்கணம் பதிவிடப்பட்டுள்ளது. கல்வியின் பெருமைகளை உணர்த்தும் நாலடியாரின் பொருட்சிறப்பை விளங்க வைக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்