அருந்ததியர் சமூக வரலாற்று நுால்.
தோல் தொடர்பான தொழில் செய்த அருந்ததியர் இன மக்கள், கலைநயத்துடன் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. தோல் ஆடை, குதிரைக்கு மேலாடை தயாரித்த நுணுக்கங்களை குறிப்பிடுகிறது. இனத்தில் பெருமை சேர்க்கும் தியாகிகள் பற்றி குறிப்பிடுகிறது.
கொங்கு மண்டலத்தில் அருந்ததியரின் குலதெய்வம் குறித்து பதிவு செய்துள்ளது. இந்த இன மக்களின் கடும் உடல் உழைப்பு, உணவுப் பழக்கத்தை விவரிக்கிறது. கிராமங்களில் சிரம வாழ்வை பதிவு செய்கிறது. அருந்ததியர் இனம் முன்னேற வழிகாட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்