காலநிலை மாற்றத்தில் மனித பொறுப்பு குறித்து விவரிக்கும் நுால். சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் குறித்து விளக்கம் தருகிறது. பூச்சிக்கொல்லியால் ஏற்பட்ட சீரழிவுகள், அமேசான் காடுகளில் அழியும் தாவரங்கள், மனித இடப்பெயர்வு என, 22 தலைப்புகளில் ஆழமாக அலசுகிறது.
காலநிலை மாற்றத்தை உணர்ந்து ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே, பிரச்னையை தீர்க்க முடியும் என்கிறது. காலநிலை மாற்றம் பூமியை அழிவுக்கு அழைத்து செல்லும் என்பதை புரிய வைத்து ஒவ்வொருவருக்கும் பங்கு இருப்பதை உணர்த்துகிறது. காலநிலை மாற்றம் குறித்து அறிய உதவும் நுால்.
– ஊஞ்சல் பிரபு