கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
சுவாங்தஸு மிகவும் வலியுறுத்துகிறார். விழிப்பாக இருங்கள். மிகவும் பயனுள்ளவர்களாக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவர். பிறகு கையாள, நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான். உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தப் படுவீர்கள். உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால், திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் வீணாக்கப்பட முடியாது. அவர் சொல்லுகிறார். பயனற்ற தன்மை தனக்கே உரிய இயல்பான சில பயன்பாடுகளையும் பெற்றுள்ளது. நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்க முடிந்தால்,பிறகு நீங்கள் அடுத்தவருக்காக வாழ வேண்டும். பயனற்றிருந்தால் யாரும் உங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். நீங்கள் இருத்தலையே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். சந்தைப் பகுதியில் கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப்போல் வாழ்வீர்கள் அந்தத் தனிமையில் நீங்கள் வளர்வீர்கள். உங்கள் முழு சக்தியும் உள்நோக்கிச் செல்லும்...