கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகாமகம் திருவிழா நடக்கிறது. 2016 பிப்ரவரியில் நடந்த மகாமகத்தையொட்டி, அகில பாரத துறவியர் மாநாட்டுக் குழு ‘கும்பமேளா கும்பகோணம் மகாமகம்’ சிறப்பு மலர் 2016 ஐ வெளியிட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள கோயில்கள், தீர்த்தங்கள், நீராடுவதற்குரிய புண்ணிய காலங்கள் உட்பட பல்வேறு அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. திருவாவடுதுறை, மதுரை அதீனங்கள், சர்வதேச வாழும் கலை மையத்தின் ரவிசங்கர் வாழ்த்துக்கள் இடம் பெற்றுள்ளன.