சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74 தலைப்புகளில் இந்த நுால் விளக்குகிறது.
நிகண்டுகளின் வரலாற்றையும், சைவ மடங்களின் தமிழ்த் தொண்டினையும், தனித்தனித் தலைப்புகளில் விளக்குவது இந்த நுாலின் சிறப்பு.
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகச்சிறந்த கையேடாக விளங்கும் இந்த நுால் மிக எளிய தமிழ் நடையில் அமைந்துள்ளது.
தற்காலத்தில் பல தமிழ் இலக்கிய வரலாறு நுால்கள் வெளிவந்திருந்தாலும், எந்த நுாலையும் போலல்லாத தனித்துவம் பெற்ற நுால் இது.
கடந்த, 1962ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நுால் வரலாற்றின் மறுபதிப்பு இந்த நுால். மறு பதிப்பாக வரும் நுால்களில் பிழைகள் மலிந்து காணப்படுவது உண்டு.
ஆனால், இந்த நுால் முற்றிலும் மறுபதிப்பாக வந்தாலும் பிழை இல்லாமல் வந்துள்ளது. முந்தைய பதிப்பை விடவும் தரமான தாளில் தரமான கட்டமைப்புடன் வெளிவந்திருப்பது இந்த நுாலின் தனிச் சிறப்பு.
– முகிலை இராஜபாண்டியன்