முகப்பு » தமிழ்மொழி » பழமொழி நானுாறு

பழமொழி நானுாறு

விலைரூ.160

ஆசிரியர் : புலியூர்க்கேசிகன்

வெளியீடு: ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று பழமொழி நானுாறு. சங்க கால பழமொழிகளின் அடிப்படையில் முன்றுறை அரையனாரால் இயற்றப்பட்டது.  வாழ்வியல் நெறியை, ‘நறுக்’கென்று சுருக்கமாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் பதியும்படி கூறப்பட்டு வருவதே பழமொழி. பட்டறிவைச் சாரமாக்கி ஐயத்திற்கு அப்பாற்பட்ட குறைந்த சொற்களால் பசுமரத்தில் அம்பைச் செலுத்துவதுபோல் கூர்மையாக வெளிப்படுத்தினர். 
பாடல்களின் பொது இயல்பு, பாட்டின் இறுதியில் வைக்கப்பட்டிருப்பதோடு, முன் இரண்டு அடிகளில் பொருள் உணர்த்தப்படுவது சிறப்பு. பாடல்கள் பழமொழிகளின் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. பண்டைய மன்னர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் சுட்டப்பட்டுள்ளன. எளிய உரை வழங்கப்பட்டு உள்ளது. அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நுால். 
மெய்ஞானி பிரபாகரபாபு  

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us