முகப்பு » கட்டுரைகள் » தவறவிட்ட தருணங்களும்... மீறி வந்த அனுபவங்களும்!

தவறவிட்ட தருணங்களும்... மீறி வந்த அனுபவங்களும்!

விலைரூ.170

ஆசிரியர் : எஸ்.எல்.நாணு

வெளியீடு: குவிகம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
எழுத்து, நடிப்பு என்ற கலைகளிலும் திறன் பெற்ற அனுபவங்களை பதிவு செய்துள்ளார். எழுதத் துவங்கிய தருணம், கிடைத்த அங்கீகாரம், வாய்த்த அறிமுகம், கிட்டிய வாய்ப்புகள் என, 40 ஆண்டு கால நிகழ்வுகளை உரையாடல் போல் சொல்லி உள்ளார்.

எழுத்தாளர் சாவி, நடிகர் நாகேஷ், இயக்குனர் பாரதிராஜா போன்றோரை சந்திக்க முடிந்தும், நெருக்கம் ஏற்படுத்த முடியாமல் போனது குறித்தும் விவரித்துள்ளார்.

கொல்கத்தா மற்றும் சென்னை நகரின் அமைப்பு, அப்போதைய பிரபல பகுதிகள் தொடர்பான தகவல்களையும், பணியாற்றிய நாடகக் கலைஞர்கள் குறித்தும் புகைப்படங்கேளாடு பதிவு செய்துள்ளார். அனுபவங்களை அள்ளித் தரும் மந்திரப் பாத்திரம் இந்த புத்தகம்.
பெருந்துறையான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us