திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள குறள்களுக்கு உரை விளக்கம் தந்துள்ள நுால். ஆனால் குறளை அச்சிடவில்லை. மொத்தம், 108 அதிகாரங்களில், 1,080 பாடல்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
‘அகர முதல’ என்ற திருக்குறளை எழுதாமல், அகரம், பகவான் என தலைப்பிட்டு, அந்தக் குறளின் அர்த்தம் ஐந்து வரிகளில் எழுதப்பட்டுள்ளது. எளிதாக புரியும்படி உள்ளது. ஆனால், மூலக்குறள் இல்லாததால் ஒரு குறை போல தோன்றுகிறது. அது குறையில்லை என முன்னுரையில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. – சீத்தலைச் சாத்தன்