முகப்பு » ஆன்மிகம் » நானும் ஆன்மாக்களும் பாகம் – 16 விநாயகன் இந்திரன் வரலாறு

நானும் ஆன்மாக்களும் பாகம் – 16 விநாயகன் இந்திரன் வரலாறு

விலைரூ.140

ஆசிரியர் : ரவி பார்கவன்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தலைப்பை பார்த்ததும் புராணத்தைச் சொல்லும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. படிக்கப் படிக்க பாதை மாறுகிறது. வித்தியாசமான சிந்தனையை கொண்டுள்ள நுால்.
பிள்ளையார் அப்பனிடம், ‘நீங்கள் படைத்த அந்தப் பிள்ளை  யார்...’ என்று கேட்டு விடுவோம் என கேள்விகளை முன் வைக்கிறது. பல இடங்களில் புரியாத வரிகள் உள்ளன. அவை புரிந்தது மாதிரியும் இருக்கின்றன.

‘ஒரு பெண்ணை அணைக்காதே, தழுவு’ என்ற கோட்பாட்டின்படி, 64 கலைகளை அப்படியே நிறைவேற்றினான் இந்திரன் என எழுதப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சங்கதிகள் என்பதால் தான், ஆன்மாக்கள் பேசுவதாகச் சொல்லி இருப்பரோ என எண்ணத் தோன்றுகிறது.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us