முகப்பு » சுய முன்னேற்றம் » மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள்!

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள்!

விலைரூ.100

ஆசிரியர் : திருமதி.சூர்யகுமாரி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மூளை பற்றி ஆய்வு செய்த அறிஞர்களும், மருத்துவர்களும் தரும் தகவல்களைக் கொண்ட ஒரு தகவல் களஞ்சியம் இந்த நுால். மூளையின் ஆற்றலைப் பெருக்க உணவு முறைகள் பெரிதும் உதவுகின்றன. மூளையில் ஏற்படும் பாதிப்புகள், மூளையைப் பாதுகாக்கும் முறைகள் போன்ற பயனுள்ள பல தகவல்களைத் தருகிறது. மூளையின் உறுப்புகள், துாக்கமும் மூளையும், அறிவுத்திறன், மூளையைத் தாக்கும் நோய்கள், மூளைக்கும் வேண்டும் பயிற்சி, மூளையின் ரகசியம், நினைவாற்றல் போன்ற தலைப்புகள் தொடர்ச்சியாக வாசிக்கத் துாண்டுகிறது.

மூளை உணர்வுகளை அறிகிறது. மூளையின் உறுப்புகள் அதன் செயல்கள் என்று விரிவான தகவல்களைத் தருகிறது. முயற்சி செய்தால் எல்லாரும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம், மேதாவியாகலாம் என்ற தகவலை பதிவு செய்துள்ளது. யோகாசனப் பயிற்சி, மூளையின் செயல்திறனைப் பல்வேறு முனைகளில் உயர்த்துவதாக குறிப்பிடுகிறது. யோகாசனம் பற்றியும், மூச்சுப் பயிற்சி பற்றியும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. மூளைத் திறனைப் பெருக்கி, சுய முன்னேற்றம் பெற பல தகவல்களைத் தரும் நுால்.
புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us