முகப்பு » கட்டுரைகள் » கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன்

விலைரூ.200

ஆசிரியர் : சுமதி

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உண்மை கனமானது என அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவங்களின் தொகுப்பு நுால். நண்பரின் காதல் திருமணத்திற்கு உதவுவதாக நினைத்து, மைனர் பெண் கடத்தல் வழக்கில் சிக்க இருந்தவர்கள் குறித்து, ‘அலை பாய்வது வாழ்க்கை அல்ல’ என்ற கட்டுரை உள்ளது.
பதிவுத் திருமணம் செய்த மகளை ஆட்கொணர்வு மனு மூலம் சந்தித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரின் சட்ட மீறலையும், அதற்கான தண்டனையையும், ‘சுதந்திர ஜீவன்களாக’ என்ற தலைப்பில் விவரிக்கிறது.

பதிவுத் திருமணம் என்பது விளையாட்டுக் காரியமல்ல; அது அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கை. முறையாக பந்தத்தை முறிக்காமல், மறப்போம் மறைப்போம் என்ற எண்ணத்தில் அடுத்த பந்தத்தை நாட முடியாது என்பதை திருமணத்திற்கு மரியாதை என உரக்கச் சொல்கிறது.
திருமண விழாக்களில் புதுமை என்ற பெயரில் நடக்கும் விஷயங்கள், பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது; பாரம்பரிய கலை, கலைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் விவரிக்கிறது. நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தையும், விழிப்புணர்வையும் ஊட்டும் நுால்.
 – சையது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us