திருக்குறள் அரங்கம் கண்ட காலகட்டத்திலேயே சங்கப்புலவர்கள், 55 பேர் திருக்குறளுக்கு மணியாரம் சூட்டி உள்ளனர் என்பதை அறிய துணை நிற்கும் நுால். ஒரு எழுத்தாளன் எழுத்தை குறைபட விமர்சிப்பது பழைய காலகட்டத்தில் அதிகம் என்பர். காரணம் அழுக்காறு; அதாவது பொறாமை. ஆனால், சங்கப் புலவர்கள் திருக்குறளை, தங்கத்தட்டில் வைத்து போற்றுகின்றனர் என்றால் எத்தனை பாராட்டுக்குரியது.
படித்தால் சிந்தைக்கு இனியது; பாடினால் செவிக்கு இனியது; பாடும் வாய்க்கும் இனியது. செந்நாப் புலவன் நுாலுக்கு சிறந்த அணிகலனாக உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்