முகப்பு » சமயம் » கர்த்தரின் நாமத்தில்

கர்த்தரின் நாமத்தில்

விலைரூ.130

ஆசிரியர் : சகோதரி லுாசி களப்புரா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: சமயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மலையாளத்தில் வெளிவந்த கர்த்தாவின் நாமத்தில் என்ற நுால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா. அவரின் வாழ்க்கை கதையே இந்த நுால்.
மலையாளத்தில் எழுதியதை நேர்கோட்டு வார்த்தைகளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவ சபைகளில், ஆலயங்களில் அந்த சகோதரிக்கு ஏற்பட்ட பிரச்னைகளை மிகைப்படுத்தாமல், கவனமாக மொழிபெயர்த்துள்ளார்.

கன்னியாஸ்திரிகள் சுதந்திரமானவர்கள் என்று பரவலாக பரப்பப்பட்டாலும், ஆணாதிக்கத்திற்கு கீழ் தான் அவர்கள், ஒவ்வொரு கன்னியாஸ்திரியின் வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்தது தான் என்ற சகோதரியின் வார்த்தைகளை உயிரோட்டமாக தந்துள்ளார். கன்னியாஸ்திரியாக பார்க்காமல், பெண்ணாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விளக்கிச் சொல்வது வேதனையை ஏற்படுத்துகிறது. எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம்.
எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us