தொல்காப்பியத்தைப் புதிய அணுகுமுறையில் ஆராய்ந்துள்ள நுால். இந்த வகை அணுகுமுறை அண்மைக்காலமாக வளர்ந்து வருகிறது. மேனாட்டுத் திறனாய்வு முறையிலும், அறிவியல் கண் கொண்டு பார்க்கும் ஆர்வத்திலும் தமிழறிஞர்கள் முயன்றுள்ளனர். இந்த நுால், டி.என்.ஏ., என்ற மரபணுக் கூறுகளோடு தொல்காப்பியக் கவிதையியலை ஒப்பிட்டுள்ளது. இது புதுமையானது.
மேனாட்டு மொழியியல் அறிஞர் ஜே.எஸ்.ஹில்லிஸ் கூற்றின் அடிச்சுவட்டில் எழுதியிருப்பது புதுமை விருந்தாக உள்ளது. தொல்காப்பியம் கூறும் அகம், புறம் கூறுகளைப் பல வகையில் டி.என்.ஏ., அணுகுமுறையோடு பாகுபடுத்தப்பட்டுள்ளது.
தொல்காப்பியக் கவிதையியலில், 23 இணை கூறுகளைத் தெரிவு செய்து, முதல் 23 இணைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடப்பதாக காட்டியுள்ளார். சில பகுப்புகள் ஏற்றுக்கொள்ள தக்கதாகவும், மறுபரிசீலனைக்கு உரிய வகையிலுமாக அமைந்துள்ளன. ஆய்வறிஞரின் அரிய முயற்சி இந்த நுால்.
– ராம.குருநாதன்