விடுகதைகள், புதிர், பிதிர், மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதை. மறைபொருளை உள்ளடக்கிய புதிர்மைப் பண்புடைய அனைத்தையும் சுட்டுவதற்கு, ‘புதிர்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விடுகதை அறிவையும், சிந்தனைத் திறனையும் ஊக்கப்படுத்தும். விந்தையான விடுகதைகள் என்னும் தலைப்பில் 2,050 புதிர்களைக் கொண்டுஅமைந்துள்ளது. குழந்தைகளின் புத்தி கூர்மை, திறனாய்வுத் திறன் வளர்க்கும் சிறந்த கலை.
இந்நுாலை முழுமையாக படிக்கும் குழந்தைகள், தானே புதிர்களை உருவாக்கும் வல்லமையை அடைவர். இந்நுால் சிறார், மாணவர், இளைஞர் என அனைத்து நிலைகளிலும் பயனுடையது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்