முகப்பு » விவசாயம் » வையை ஆண்டு மலர் – 2022

வையை ஆண்டு மலர் – 2022

விலைரூ.100

ஆசிரியர் : அ.சரவணக்குமார்

வெளியீடு: பென்னிகுயிக் பதிப்பகம்

பகுதி: விவசாயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
விவசாயம் தொடர்பாக பல்வேறு நிலையிலான அனுபவங்களையும், வளர்ச்சி சார்ந்த தகவல்களையும் தொகுத்துள்ள நுால். இயற்கை விவசாயம், உற்பத்தி மேம்பாடு போன்ற கருத்துக்களையும் உள்ளடக்கிய ஆண்டு மலராக வெளிவந்துள்ளது.

இயற்கை விவசாயம் தந்த அனுபவங்களை விவசாயிகள் பகிர்ந்துள்ளனர். வெற்றி இலக்கை அடைந்தது குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். எழுத்தாளர் பாமயன் எழுதிய மண் வளம் குறித்த முக்கிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

அடுத்து, விவசாய வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்பு குறித்த கட்டுரை அமைந்துள்ளது. பனை விவசாயம் பற்றிய விபரங்கள் உள்ளன. இயற்கை உணவே மருந்து என்ற தலைப்பில், உணவின் மகத்துவம் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. விவசாய உற்பத்தி மேம்பாடு சார்ந்து பல கட்டுரைகள் அடங்கியுள்ளன. இயற்கை விவசாயம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள உதவும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us