அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அலுவலகத்தில், அக்கம் பக்கத்து வீடுகளில், உறவினர்களில், நண்பர்களில் என்று இப்படி பலர். இவர்களை கவனித்தீர்கள் என்றால், நிச்சயம் ஏதோ ஒரு வித்தியாசமான குணாதிசயம் அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அத்தகைய நபர்களின் குணாதிசயங்களை இந்த புத்தகத்தில் அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார், இதன் ஆசிரியர் சரவணக்குமார். இந்த புத்தகத்தைப் படிக்கும்போது, உங்களுக்கும் இத்தகைய குணாதிசய மனிதர்களை சந்தித்த ஞாபகம் வரக்கூடும்.
–
இளங்கோவன்