முகப்பு » வாழ்க்கை வரலாறு » மருது பாண்டியரின் வீரத்தின் வேள்வித் தீ!

மருது பாண்டியரின் வீரத்தின் வேள்வித் தீ!

விலைரூ.280

ஆசிரியர் : தாமரை ஹரிபாபு

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
மருதுபாண்டியரின் வீரம் குறித்து சுவைபட எழுதப்பட்டுள்ள புதின நுால். மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை படை வீரம் சிறப்பாக பேசப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக, பெரிய மருது புலியுடன் தனிமனிதனாக போராடி வென்ற இடம், ‘புலிப்பள்ளம்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருப்பது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

திருவாடானையில் சின்ன மருது இளவட்டக் கல்லைத் துாக்கி, முத்தம்மாளை திருமணம் செய்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலு நாச்சியார் வீரத்தைக் காட்டி விளக்கப்பட்டுள்ளது. அகமும் புறமும் கலந்து புதினமாக படைக்கப்பட்டுள்ளது.

மருது சகோதரர்கள் மத வேறுபாடு இல்லாமல் மதித்தனர் என்பதையும் அறிய முடிகிறது. மருது சகோதரர்களை பக்தியைக் கொண்டே ஆங்கிலேயர் சிறை பிடித்ததும் கூறப்பட்டுள்ளது. புதினத்திற்கு சிறப்பூட்டும் வகையில் தமிழ் இலக்கியப் பாடல் வரிகள் தகுந்த இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. மருது பாண்டியர்களின் வீரத்தைப் போற்றும் நுால்.

முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us