முகப்பு » ஆன்மிகம் » திருமுறையுள் கருத்தும் கதையும்

திருமுறையுள் கருத்தும் கதையும்

விலைரூ.360

ஆசிரியர் : உமா பாலசுப்ரமணியன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கருத்தைக் கதையோடு சொல்லி விளக்க வைக்கும் நூல். திருமுறைப் பாடல்களை சுருக்கமாக சுவையாக 30 அத்தியாயங்களில் விளக்கி உள்ளது.
அவினாசி அப்பனை சுந்தரர் பாட, தாமரை தடாகத்திலிருந்த முதலை அதை கேட்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. நூல் நூற்கும் ராட்டினத்தில் சிலந்தி வலை பின்னியது, ‘வாய்க்கு எட்டியது வயிற்றுக்கு எட்டவில்லை’ போன்ற நயங்களுக்குப் பஞ்சமில்லை.

கந்தர் அலங்காரம், திருமந்திரம், சிவராத்திரி புராணம், அபிராமி அந்தாதி, பட்டினத்தார் என மேற்கோள்கள் காட்டி, புலமையை திறம்பட வெளிப்படுத்துகிறது. திருமுறைப் பாடல்களை விளக்கும் சாக்கில் சிவத்தலங்களுக்கு அழைத்துச் சென்று பரவசப் படுத்துகிறது.
‘கனிக்கும், கரும்புக்கும் எட்டா இனியவன்’ போன்ற தலைப்புகள், கவனத்தைத் திசை திருப்ப விடாமல் செய்கின்றன. படித்து அனுபவித்தால் தான் புரியும்.

பிரபு சங்கர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us