இன்றைய உலகப் பொதுவுணவாய் மாறி இருக்கிறது பிரியாணி. நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி என்றெல்லாம் அறிவிக்கப்பட்டு விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது. இந்த பிரியாணி எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
அதற்கான சுவையும் மணமும் எப்படி வந்தது? ஆதிகால பிரியாணியும் இன்றைய பிரியாணியும் ஒன்றா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மணக்க மணக்க பதில்களைப் பரிமாறுகிறது இந்த நுால்.