முகப்பு » சுய முன்னேற்றம் » மூன்றாம் கை எனும் நம்பிக்கை!

மூன்றாம் கை எனும் நம்பிக்கை!

விலைரூ.100

ஆசிரியர் : பேராசிரியர் க.இராமச்சந்திரன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சொற்களால் ஊக்கம் தரும் நம்பிக்கை நுால். மரணம் வாழ்க்கை கதவை தட்டும்போது, என்ன செய்வாய் என்ற கேள்விக்கு விடை சொல்கிறது. நல்ல புத்தகத்தை எப்போதும் கையில் வைத்திருக்க கூறுகிறது. ஒவ்வொருவரிடமும் கேள்விகள் பனிக்கட்டிகளாக உறைந்து கிடப்பதை விவரித்து, விடை காண சொல்கிறது.

அகந்தையை விட்டு, கருத்துக்களை உடும்பாக பிடிக்காமல் தளர்த்தி கொண்டால், சமமான தீர்வு கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. வறுமை, அவமானம், கஷ்டம், தோல்வி, மனம் தளராத முயற்சியை கடந்து, சாதித்த அறிஞர்கள், தலைவர்கள் வாழ்வை முன்னுதாரணமாக காட்டியுள்ளது. தேவைக்கு மீறிய வெற்றி வரும்போது, அதேபோன்று முயற்சி செய்வோரிடம் பகிந்து கொடுக்க வலியுறுத்துகிறது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க உதவும் நுால்.

டி.எஸ்.ராயன் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us