முகப்பு » தமிழ்மொழி » தமிழில் பிழையின்றி எழுதலாம்

தமிழில் பிழையின்றி எழுதலாம்

விலைரூ.140

ஆசிரியர் : ந.கோபாலகிருஷ்ணன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு முறையான வழிகாட்டுதல் தரும் நுால். மொத்தம், 24 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நிறுத்தல் குறி இடுவது குறித்தும் கற்றுத் தருகிறது. நேரடியாக அருகில் இருந்து சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாக அறிமுகம் செய்கிறது. அடுத்து எழுத்துகளை பற்றி பேசுகிறது. சில பகுதிகளில் வரைபட விளக்கம் தரப்பட்டுள்ளது. விளக்கங்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக தரப்பட்டுள்ளன.

சொற்களை உச்சரிக்கும் முறை, பிழையின்றி வாக்கியம் அமைத்தல், உரிய இடங்களில் நிறுத்தற் குறியிடுதல் போன்றவை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சுலபமாக புரிந்து நடைமுறைப்படுத்த கற்றுத் தரும் நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us