மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக, டில்லியில் நடந்த முற்றுகை போராட்டம் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் நுால். போராட்டம் துவங்கிய நிகழ்வுடன் அதன் போக்கு, முடிவு என சகலத்தையும் பதிவு செய்துள்ளது.
டில்லியில் விவசாயிகள் நடத்திய முற்றுகை மற்றும் பேரணி, அதை சார்ந்து நாடு முழுதும் எழுந்திருந்த எதிர்ப்பு மற்றும் கொந்தளிப்பை பதிவு செய்துள்ளது. பல நிகழ்வுகள் படத்துடன் பதிவாகியுள்ளன.
ஒரு தொடர் போல் அவதானித்து எழுதப்பட்டு உள்ளது. இறுதியில் மக்கள் விரும்பாத சட்டங்களை திணிப்பது அடக்குமுறை என முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
–
ஒளி