சந்தங்கள் நிறைந்த பாடல்களை பாடிய கவிஞரின் வாழ்க்கை வரலாறை தொகுத்து கூறும் நுால். காதல் தோல்வியால் கவிஞன் எப்படி மாறிப் போனான் என்பதை படிக்கும் போது தெரிகிறது. நெஞ்சம் விம்மும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பாரதிதாசன் எழுதியதை நகலெடுக்கும் பணி செய்த கவிஞர் தமிழ் ஒளி பாடிய காவியங்களின் முடிவு எல்லாம் சோகம். காரணம் சொந்த வாழ்க்கை பின்னணியின் எதிரொலியாக இருக்கக்கூடும் என தகவல்கள் தரப்பட்டுள்ளன.
சைக்கிள் ரிக்சாவில், தமிழ்ஒளியை ‘பனகல் பார்க்’ அருகே கண்ட கவிஞர் கண்ணதாசன் காரை விட்டு இறங்கி வந்து நலம் கேட்டதுடன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்ததது போன்ற தகவல்களை உடைய நுால்.
– சீத்தலைச் சாத்தன்