முகம் தெரியாத படைப்பாளர்களை வெளிச்சத்திற்குள் கொண்டு வரும் உயரிய நோக்கில் தொகுக்கப்பட்ட நுால். புதிய படைப்பாளர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
சமுதாய சிந்தனை, சிக்கல்கள் பாடுபொருளாக அமைந்துள்ளன. சொத்தால் உறவு முறிதல், புரிதல் இல்லா திருமண வாழ்க்கை என சமூக சிக்கல்களை விவரிக்கும் சிறுகதைகள் உள்ளன.
தன்னம்பிக்கை முன்னெடுப்பு, தனி மனித பொறுப்பு, முதுமையின் பெருமை, முதியோர் பிரச்னை போன்ற பொருள்களில் அமைந்துள்ள கட்டுரைகளும், ஆன்மிகம், சுற்றுச்சூழல், மொழி உணர்வு பற்றிய கவிதைகளும் அலங்கரிக்கின்றன. புதிய படைப்பாளிகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்