திருமாலின் கிருஷ்ண அவதார நிகழ்வுகளை விவரிக்கும் நுால். சந்தக் கவிதையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையும் எந்த சந்தத்தில் அமைந்துள்ளது என்பதை விவரிக்கிறது.
கண்ணனும், ராதையும் நிகழ்த்திய அற்புதங்களைக் கற்பனை கலந்து சொல்கிறது. கண்ணனை வழிபடாமல் ராதை தடுத்ததாகக் கருதிய பக்தன், சாபம் இடுகிறான். சாபம் பலித்தது. ராதை கண்ணனைப் பிரிந்து 100 ஆண்டு காலம் பூமியில் வாழ வேண்டும் என்ற சாபம் பலித்தது. கம்சனைக் கொல்ல அவதாரம்எடுத்த கதை விளக்கப் பட்டுள்ளது. கவிதையில் துாது, ஆற்றுப்படை நிகழ்வும் கூறப்பட்டுள்ளது.
கீதை தரவும், கம்சனைக் கொல்லவும், கண்ணன் அவதரித்தான் என்பதை அழகாக விளக்குகிறது. சந்தக் கவிதை எழுத விரும்புவோருக்கு, வழிகாட்டியாக அமையும்.
– பேராசிரியர் இரா.நாராயணன்