புத்தகத்தின் பொருள் அடக்கம் பகுதிக்கு, அகம் என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ள நுால். எழுத்து ஆற்றல் துலக்கமாக தெரிகிறது. நிறைய செய்திகள் திரட்டி இருக்கிறார். தேனடை என்று சொல்லலாம்.
சிறந்த மனிதர்களின் நோக்கங்கள் சொல், செயல் என்பதையும் ஆங்கில பழமொழிகள் தமிழ் காப்பியங்களில் தேர்ந்த வரிகளை சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால், முயற்சிகள் தான் முதல் துவக்கம்.
உலக வரலாற்றில் நாட்டுக்காக 27 ஆண்டுகள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா பற்றியும், காந்தியை முதன் முதலில் மகாத்மா என்று அழைத்த தாகூர் பற்றிய விபரங்களும் உள்ளன. அவசியம் படித்து உணர வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்