மன அமைதியுடன் வாழ உதவும் பக்தி பாடல்களின் தொகுப்பு நுால். ஸ்தோத்திரங்களும், அஷ்டோத்திரங்களும் தரப்பட்டுள்ளன.
ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி, வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள், சுவாமி அய்யப்பன் மற்றும் ஸ்ரீதேவி இளங்காளி அம்மன் மீதான அஷ்டோத்திரங்களும், அஷ்ட தஜபுஜ துர்க்காம்பிகை மந்திரமும், ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியின் காயத்திரி மந்திரங்களும் இடம் பெற்றுள்ளன.
சிவன், விஷ்ணு, அம்பாள், கணபதி, முருகன், ஆஞ்சநேயர் பக்தி பாடல்களும், ஜோதி வழிபாட்டுப் பாடல்களும் தொகுத்து தரப்பட்டுள்ளன. நலமுடன் வாழ வழிகாட்டும் பக்தி பாடல்கள் நிறைந்த ஆன்மிக நுால்.
– புலவர் சு.மதியழகன்