நள்ளிரவில் வீடு புகுந்து மனிதர்களை புசித்த சிறுத்தையை கொன்றது பற்றிய அனுபவ நுால். சிறுவர் – சிறுமியருக்கு நம்பிக்கையை கற்பிக்கும் வகையில் உள்ளது.
காட்டில் நடந்த மயிர் கூச்செறியும் சாகசங்கள் எளிய நடையில் உள்ளது. வேட்டையாட போனவரையே சிறுத்தை பின் தொடர்வது நடுநடுங்க வைக்கிறது. அடர்ந்த காட்டில் வாழ்வது போன்ற சாகசத்தை தருகிறது. இமயமலை பற்றிய வியப்பான செய்திகள் உள்ளன.
ஒரே மூச்சில் படிக்கும் வகையில் சுவாரசியமாக உள்ளது. படித்ததும் அந்த சிறுத்தை நம்மை பின் தொடர்வது போல் திகில் உணர்வு ஏற்படும். அந்த அளவு காட்சிகள் ஆழமாக பதிவாகியுள்ளன. சூழலியல் மற்றும் விலங்குகள் சார்ந்து படிப்பை தரும் நுால்.
– கண்ணன்