நுாற்றுக்கும் மேற்பட்டோரை கொன்று புசித்த சிறுத்தை வேட்டை சாகச அனுபவத்தை விவரிக்கும் நுால். சிறுவர் – சிறுமியருக்கு நம்பிக்கையை கற்பிக்கும் வகையில் உள்ளது.
காட்டில் நடந்த மயிர் கூச்செறியும் சாகசங்கள் எளிய நடையில் உள்ளன. வேட்டையாடப் போனவரையே சிறுத்தை பின்தொடர்வது நடுநடுங்க வைக்கிறது. அடர்ந்த காட்டில் வாழ்வது போன்ற அனுபவம் தருகிறது. இமயமலையை கண்முன் காட்டுகிறது.
ஒரே மூச்சில் படிக்கும் வகையில் சுவாரசியமாக உள்ளது. படித்ததும் அந்த சிறுத்தை நம்மை பின்தொடர்வது போல் திகில் உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவு காட்சிகள் ஆழமாக பதிவாகியுள்ளன. சூழலியல் மற்றும் விலங்குகள் சார்ந்து அரிய படிப்பினை தரும் நுால்.
--– கண்ணன்