புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு அனுபவங்களை நகைச்சுவையோடு சித்தரிக்கும் நுால். அமெரிக்கா சுரங்க ரயில் பயண அனுபவம், பண்டிகைகளை தவறவிட்ட ஏக்கம் போன்றவை பதிவிடப்பட்டுள்ளன.
தமிழக பண்பாடு, கலாசாரங்கள், மொழியுணர்வை நினைவூட்டும் வகையில் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள் மற்றும் கவியரங்கம் விவரிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் அரசியலில் ஈடுபட்டு, உயரங்களை தொட்ட தமிழர்களை சிறப்பிக்கும் அமர்வு, ஹார்ட்வேர் பல்கலையில் தமிழ் இருக்கையை நிறுவ முன்னெடுத்த முயற்சிகள் என தகவல்கள் தரப்பட்டுள்ளன.
நியூயார்க்கில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை தெரிவிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்