முகப்பு » கதைகள் » மீண்டும் வரும்

மீண்டும் வரும் பொற்காலம் (புதினம்)

விலைரூ.70

ஆசிரியர் : சூசன்.

வெளியீடு:

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோயில் தெரு, 2ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை-5 (பக்கம்: 208. விலை: ரூ.70).


நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுத் திட்டத்தில் பரிசு பெற்ற புதினம். இளம் வயதில் இயற்கை எய்திய, தனது மகன் அண்ணல் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி, கதை எழுதும் வல்லுனர்களைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் போட்டி அறிவித்துப் பரிசளித்து வருகிறார் புலவர் நன்னன். பெரியாரியல், தமிழியல், திராவிடவியல் ஆகியவற்றை ஒட்டியே இந்தப் போட்டியில் பங்கு பெறும் படைப்புகள் அமைந்திருக்க வேண்டும் என்பது போட்டியாளர்களுக்கு உள்ள கட்டுப்பாடு, நிபந்தனை.

பரிசு பெற்ற இந்தப் புதினத்தில் ஜாதிப் பிரச்னை மையக் கருவாக அமைந்துள்ளது.ஆதிக்க உணர்வுள்ள உயர் ஜாதியின் பிரதிநிதியாக நஞ்சுக்குட்டி நன்று ஒரு கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சராசரி தமிழ்நாட்டுக் கிராமத்தில் நிலவும் ஜாதிச் சழக்கு, அதன் தொடர்பாக எழும் வன்முறை, வல்லடி வழக்கு, விதவை மறுமணம், ஆண்களின் பாலியல் வன்கொடுமை என கதை நகர்கிறது. சம்பவங்களில் புதுமைகளைப் பார்க்கவே இயலாத புதினமாகத் தெரிகிறது. ஏற்கனவே செய்தித் தாள்களில் திரைப்படங்களில் பார்த்துப் பார்த்து சலித்துப் போன சம்பவங்கள் புதினத்தில் காணப்படுகின்றன.

முதலில் இருபத்தேழு எழுத்தாளர்கள் போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ததாகவும், பின்னர் பதினொருவர் மட்டுமே படைப்புக்களை அனுப்பியதாகவும் அதில் ஐந்தே ஐந்து புதினங்கள் மட்டுமே மூன்று வல்லுனருக்கு அனுப்பப்பட்டது என்றும் நன்னன் குடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியாரியலுக்கும் கதை எழுதும் படைப்பாளிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி சற்று அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறது. அடுத்த ஆண்டுப் போட்டியிலாவது ஒரு நல்ல படைப்பை எதிர்பார்ப்போம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us