பார்சி இன மக்களின் இறப்பு சடங்கை முன்வைத்து எழுதப்பட்டுள்ள நாவல். கதைசொல்லி கூற்றில் நகர்கிறது. இறந்தவர் உடலை சுத்தப்படுத்தி, அமைப்புக் கோபுரம் என்ற பகுதிக்கு எடுத்துச் செல்லும் பிணந்துாக்கிகளின் வாழ்க்கைப் பின்னணி விவரிக்கப்பட்டுள்ளது. காதல் வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, குழந்தையுடனான பாச உணர்வு அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
காந்தியடிகளின் தண்டி யாத்திரை, இந்திய அரசியல் சட்டம் உருவாதல், ஹிட்லர் பற்றிய செய்திகள், நாடுகளுக்கிடையேயான ஆக்கிரமிப்பு எல்லாம் மின்னற்கீற்றாக வந்து போகின்றன. அன்றைய பார்சி மக்களின் வாழ்க்கைப்போக்கு, இறுதிச்சடங்கு போன்றவற்றை இன்று பண்பாட்டு நிலையில் அமைந்துள்ள காலமாற்றத்தை அறிய உதவும். லகுவான நடையில் மொழிபெயர்த்துள்ளார் மாலன்.
– இராம.குருநாதன்