ஒரு மனிதனுக்கு முக்கியமானது எது. வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர். அதுதான் மன நிம்மதி. அந்த நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத்தராது; ஆன்மிகம் மட்டுமே அந்த மன நிம்மதியைக் கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் நுால் தான் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை!’
நுால் அமைப்பும் புதுமையாக இருக்கிறது. குருவுடன் ஒரு வார ஆன்மிக பயணம் என்ற முறையில் படிப்படியாக ஆன்மிக நெறிமுறைகளை, பல உதாரணங்கள் மூலம் சிஷ்யர்களுக்கு குரு விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுாலைப் படிக்கும்போது நீங்களே அந்த ஆன்மிகப் பயணத்தில் உடன் சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும்.
–
இளங்கோவன்