அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தி போன்ற குணங்களை அழகாக படம் பிடித்துக் காட்டும் புத்தகம். உதவுவதில் நிறைவின் ரகசியம் அடங்கியுள்ளதாக மனதை நிறைத்து விடுகிறது.
காதல் வலையில் சிக்கிய பெண்ணை மருத்துவர் மீட்டெடுத்தது வியக்கச் செய்கிறது. ராணுவ வீரர்களின் தேச பக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் ‘(அ)சாதாரண மனிதர்கள்’ என்ற கதையில் உணர முடிகிறது.
முதுமையைத் தவிர்க்க இயலாது. ஆனால், நம் மனதில் அன்பு துளிர்த்தால் அப்போது ஏற்படும் தனிமையும் வறுமையும் அஞ்சி விலகி விடும் என்பதை மிகவும் உருக்கமாக சொல்லும் ‘ஜெயதுர்கா’ கதை, மனதை சிலிர்க்க வைக்கிறது.
–- தி.க.நேத்ரா