முகப்பு » கவிதைகள் » குமரிச்சாரலில்

குமரிச்சாரலில் பொன்மொழிப் பூக்கள்

விலைரூ.170

ஆசிரியர் : தங்கசுவாமி சிவசங்கரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாடு, மாநிலம், ஊர், மொழி, இயற்கை, தத்துவம் மற்றும் பொது வாழ்க்கை அனுபவங்களைத் தொடுத்து எழுதப்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு நுால். தலைப்புக்கேற்ப படைக்கப்பட்டுள்ளது. தெளிவான கருத்தோட்டத்தோடு சொற்சுவை குன்றாமல் உள்ளது.

தமிழக பெருமையை வருணிக்கும் கவிதை, மொழி வளத்தோடு அமைந்துள்ளது. ஊரைப் பற்றிய கவிதையில் சந்தங்கள் இனிமையூட்டுகின்றன. பொதுக் கவிதைகளில் அங்கங்கே பாரதியாரின் தாக்கம் வெளிப்படுவதை காண முடிகிறது.

பொருத்தமான சொல்லடுக்குகளோடு எதுகை, மோனைகள் கவர்கின்றன. பல்வேறு வகைப்பாட்டில் எழுதப்பட்ட தொகுப்பாக அமைந்துள்ளது. கவித்துவ சொல்லாட்சி நிறைந்த நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us