முகப்பு » ஆன்மிகம் » திருப்பாவை

திருப்பாவை

விலைரூ.80

ஆசிரியர் : கவிஞர் பிரபாகர பாபு

வெளியீடு: தமிழ்க்கவி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மார்கழி மாத விடியற்காலை நேரத்தில் பெண்களை எழுப்பி நீராடச் செல்வதாகப் பாடப் பெறும் திருப்பாவைக்கு எளிய உரை தரும் நுால். இயல்பான ஓட்டத்தில் செல்கிறது. சில சொற்களுக்குப் புதிய நோக்கில் பொருள் காண முற்பட்டுள்ளது.
குறளை என்ற சொல், கோள் சொல்வதாகத்தான் மூலத்தில் உள்ளது. தீயசொல் என்று இதில் சுட்டப்பட்டுள்ளது. வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்பது ஆண்டாள் கால ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் தொடர். வெள்ளி சுக்கிரனையும், வியாழன் குருவையும் குறிக்கும். மார்கழி மாதத்தில் வெள்ளி கிரகம், குருவாகிய கிரகத்தை மறையச் செய்வது வானியல் தொடர்பானது.
இத்தொடரின் வழி அக்காலகட்டத்தை மு.ராகவைய்யங்காரும், இரா.இராகவைய்யங்காரும் ஆராய்ந்துள்ளனர். இந்த உரை நுாலில் வெள்ளி எழுந்து பாம்புகளும் உறங்கிவிட்டன என்று புதுப்பொருள் கண்டிருப்பது வியப்பாக உள்ளது. எந்த உரையிலும் காணாதது.
ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us