முகப்பு » ஆன்மிகம் » வானில் தவழும் பக்தி மாலை

வானில் தவழும் பக்தி மாலை

விலைரூ.300

ஆசிரியர் : அகிலா விஜயகுமார்

வெளியீடு: அர்ஜித் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வானொலியில் ஒலிபரப்பான ஆன்மிக கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆழ்ந்து சிந்தித்துப் படிக்க ஏற்றது. நிறைய செய்திகள் நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி, நரசிம்மர், நாகபஞ்சமி என தெய்வங்களின் அருள் ஆற்றலை, கோவில் விழாக்களை அழகாக விவரித்து உள்ளது. பக்தி தரும் படைப்பாற்றலை காட்டுகிறது. அபாயம் என்று அலறினால் அபயம் தருவான் அருளாளன் என உரைத்திருப்பது நல்ல கருத்து.

பங்குனி உத்திரத் திருநாள் எத்தனை தெய்வங்களின் திருமண நாள் என்பதை படிக்கும்போது பிரமிப்பு வருகிறது. சிறப்பான ஆன்மிக விருந்தாக உள்ள நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us