முகப்பு » வர்த்தகம் » ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

விலைரூ.500

ஆசிரியர் : எம்.ராமச்சந்திரன்

வெளியீடு: வசந்த் பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஏற்றுமதி தொழில் செய்வதுகுறித்து புரிந்து கொள்ள உதவும் நுால். அயல்நாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒருவர் கூட ஏற்றுமதி தொழிலைத் துவங்கி எப்படி வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்பதற்கான வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் பட்டியலை புள்ளி விபரத்துடன் தருகிறது.

நான்கு பிரிவுகளில் 54 அத்தியாயங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி நகரங்கள் சிறப்பு ஏற்றுமதி நகரங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த நகரங்களிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் பற்றியும் அறிய தருகிறது.

ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் அரசுத்துறை எவை என்பதையும், வணிக நிறுவனங்களையும் அறிவித்துள்ளதோடு, வங்கிக் கடன் பெற்று ஏற்றுமதி தொழில் செய்யும் நடைமுறையையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொழில் செய்வோருக்கும், செய்ய விரும்புவோருக்கும் உதவும் நுால்.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us