சங்க இலக்கிய நுால்களில் குறிப்பிடப்படும் குடவாயில் என்ற ஊர் பற்றி தற்போதைய நிலை வரை ஆராய்ந்து தகவல்களை தரும் நுால். ‘குடவாயிலெனும் நங்கை நல்லாள்’ என்ற அத்தியாயத்தில் துவங்குகிறது. சங்ககாலத்தில் குடவாயில் என்ற பெயரில் அமைந்த ஊர், தொடர்ந்து வரலாற்றில் வகித்த நிலை, பெற்று வரும் மாற்றங்களை, இலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் வழியாக ஆராய்கிறது. அதன் அடிப்படையில் உறுதிப்படுத்திய தகவல்களை உரிய ஆதாரங்களுடன் தருகிறது.
இன்று அந்த ஊரின் நிலை பற்றிய விபரத்தையும் எடுத்து கூறுகிறது. ஊரின் இருப்பையும் மாற்றத்தையும் ஆராய்ந்து கூறுகிறது. மறுபதிப்பாக வெளிவந்துள்ள நுால்.
– ஒளி