அன்பு, வலி, அக்கறை போன்ற குணாதியங்களை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
பெற்றோருக்கு மகள் எழுதும் கடிதம், ‘அபியும் அம்மாவும்’ கதை, பிரிவை உணர்த்துகிறது. பெற்றோர், உறவுகள் எடுத்திருந்த அக்கறையை வலியுடன் பேசுகிறது.
சென்னையில் பணிபுரிந்து, ஓய்வுக்கு பின் மதுரை கிராமத்தில் வசிக்க, மகன் பெங்களூரு, மகள் திருச்சி என, செட்டில் ஆகின்றனர். மனைவி மறைவுக்கு பின், மகன் வீட்டில் சுதந்திரமாக வாழ முடியவில்லை என தவிக்கும் முதியவரின் வலியை கூறுகிறது.
கடை வாசலில் படுத்திருந்த நாயை விரட்டப் படும் அவஸ்தையை கூறி, ‘நோவு’ கதை சிந்திக்கத் துாண்டுகிறது. ஒவ்வொரு கதையும் பார்த்த சம்பவங்களை நினைவூட்டுகின்றன. கதை எழுத முயல்வோருக்கு உதவும் நுால்.
– -டி.எஸ்.ராயன்