முகப்பு » கதைகள் » மறைந்திருந்து

மறைந்திருந்து

விலைரூ.70

ஆசிரியர் : எஸ்.எல்.நாணு

வெளியீடு: குவிகம் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிந்திக்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சமூக நாவல் நுால். முற்பகலில் செய்வது பிற்பகலில் விளையும் என்ற மையக்கருத்தை அடிப்படையாக உடையது.

நல்ல கருத்தை உள்வாங்க வேண்டும் என உருவாக்கப்பட்டுள்ளது. தவறு செய்தால், துரோகம் நினைத்தால் அதன் விளைவு என்ன என்பதை உணர்த்துகிறது. கதாபாத்திரங்களின் செயல்பாடு வழியாக, தப்பு மற்றும் சரி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வு நின்று போவதில் துவங்கி விறு விறுப்புடன் பயணிக்கிறது. வேதனை, அனுதாபம், அவநம்பிக்கை என உணர்வுகள் மாறி மாறி வந்து போகின்றன. துரோகத்துக்குரிய தண்டனையை மிக எளிமையாகக் காட்டுகிறது.

தவறு செய்தவனை தனிமைப்படுத்துவது மிக உச்சமான தண்டனை என்பதை உரைக்கிறது. மனதில் நிழலாடும் கதாபாத்திரங்களை உடைய நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us