உபதேசம், அறிவுரை போன்ற வறட்சி விஷயங்களை, கற்பனைத் திறனால் விரும்பும் ஒன்றாக மாற்ற முடியும் என நிலைநாட்டியுள்ள நுால்.
நுாலின் முதல் பாகத்தில் பகவத் கீதைக்கு, ‘கண்ணனின் முத்தம்’ என பெயர் வைக்கலாம் என்று கூறியவர், இரண்டாம் பாகத்தில், ‘கண்ணனின் அன்பு’ என்று பெயர் சூட்டலாம் என்கிறார்; அந்த அளவுக்கு அனுபவித்து எழுதியுள்ளார்.
பகவத் கீதையின் சாரம் காதல். இறைவன், மனிதர்கள் மீது வைத்திருக்கும் இணையற்ற காதல். அந்த அன்பு தான் ஆத்மா. அந்த அன்பு தான் பிரம்மம். அந்த அன்பு தான் ஆண்டவன். இவ்வுலகம் முழுதும் பரந்து நிற்கும் அன்பு அழிவற்றது என்கிறது.
– இளங்கோவன்