திருமுறையுள் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி இளைஞர் மனதை திருத்தி அமைக்கும் நுால்.
உணவு வேண்டுமானால், முன்கூட்டியே சமையல் பொருட்களை தயார் செய்து கொள்வது போல, நிம்மதியான வாழ்வுக்கு இறையருளை சேகரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மனிதருக்கு உதவி அளித்தலும், பெறுதலும் வரம்புக்கு உட்பட்டது.
ஆனால், இறைவன் பெருங்கருணையோ அளப்பரியது. எல்லையற்ற வகையில் ஆண்டவன் அருள்புரிகிறான். சங்காரம் என்ற பரிபூரண அமைதி என்பது உறக்க நிலை தான். இந்த அனுபவம், நிரந்தர உறக்கத்துக்கான ஒத்திகை என உணர்த்துகிறது.
உயர்வடையச் செய்யும் அற்புத நுால்.
– பிரபு சங்கர்