முகப்பு » கதைகள் » 24 சிறுகதைகள்

24 சிறுகதைகள்

விலைரூ.125

ஆசிரியர் : கவிஞர் க.சிவசண்முகம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனிதனின் இயல்பான குணங்கள், சமூகம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணின் குடும்ப பாரம் மற்றும் தினசரி உழைப்பில் இயந்திர கதியாக செயல்படுவோருக்கு ஏற்படும் சிரமங்களை மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது.

ஒரு கட்சி, பதவியில் அங்கம் வகித்து வரும் வேலை தேடும் இளைஞரை, எப்படி எல்லாம் பாதிக்கிறது என, ‘நகர செயலாளர்’ கதை கூறுகிறது. மகள் தாய் மீது வைக்கும் பாசம், குடும்ப சூழல், பெண் படிப்பு, திருமணம் என, ‘அம்மாவின் ஆணை’ கதை பகிர்கிறது.

மறதி மனிதனை திணற வைக்கும் என்பதை, ‘மறதி’ கதை எச்சரிக்கிறது. பயணத்தில் கிடைக்கும் அனுபவத்தை, ‘தேடினேன் நாடினேன்’ கதை அழகாக பகிர்கிறது. ஒவ்வொரு கதையும், மனித மனங்களின் இயல்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us